×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இல்லத்தரசிகளே இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க... உங்கள் வீட்டில் ஈ, கொசு, எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை இருக்கவே இருக்காது....

இல்லத்தரசிகளே இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க... உங்கள் வீட்டில் ஈ, கொசு, எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை இருக்கவே இருக்காது....

Advertisement

உங்கள் வீடு 24 மணி நேரமும் பளபளனு ஈ, எறும்பு, கொசு, கரப்பான் பூச்சி தொல்லை இன்றி இருப்பதற்கு இந்த எளிய பொருட்களை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்து பாருங்கள்.

முதலில் ஒரு பக்கெட்டில் வீடு துடைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, டெட்டால் 1 மூடி, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் 1 மூடி, ஷாம்பூ 1/4 ஸ்பூன், ரச கற்பூரம் 2 நன்றாக தூள் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் நன்றாக கரைத்து விட்டு இந்த தண்ணீரைக் கொண்டு ஒரே ஒருமுறை மாப் போட்டாலே உங்கள் வீடு பள பளனு வாசமாக மாறிவிடும்.

லைசால் போன்ற எந்த பிராண்ட் லிக்விடை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். உங்கள் தலைக்கு போடும் எந்த ப்ரான்ட் ஷாம்புவை வீடு துடைக்க பயன்படுத்தினாலும் டைல்ஸ் பளபளப்பாக இருக்கும். ரச கற்பூரம் என்று சொல்லப்படும் இதை தண்ணீரோடு சேர்த்து வீட்டில் மாப் போட்டால் பூச்சிகள் பிரச்சனை நிச்சயம் வராது.

இதனுடைய வாசனை வீடு முழுவதும் எப்போதும் நிறைவாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை ஜவ்வாது கூட இந்த தண்ணீரில் கலந்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#House cleaning #Tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story