உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மாதுளம் பழம்! யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...
மாதுளம் பழம் ஆரோக்கியத்திற்கு நல்லதானாலும் சில நோயாளிகள் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். யார் யார் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியத்திற்கு உதவும் பல காய்கறி மற்றும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். ஆனால் சிலருக்கு இது பலன் தருவதற்குப் பதிலாக பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவதானம் தேவை.
மாதுளம் பழத்தின் நன்மைகள்
சிவப்பு நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும் மாதுளம் பழம் வைட்டமின், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதேசமயம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
1. இரத்தம் குறைவாக உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அதிகம் சாப்பிடக் கூடாது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் இரத்த அழுத்தத்தை குறைப்பதால், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புகள் வரலாம்.
இதையும் படிங்க: சியா விதைகளில் கூட சிக்கல் உள்ளது..! இந்த உடல் பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட வேண்டாம்...!
2. ACE தடுப்பான்கள், ஸ்டேடின்கள், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் உள்ளிட்ட மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மாதுளை சாப்பிடக்கூடாது. இதன் சேர்மங்கள் கல்லீரல் தொடர்பான மருந்துகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
3. மாதுளம் சாறு, CYP3A4 மற்றும் CYP2C9 போன்ற கல்லீரல் நொதிகளை தடுக்கிறது. இதனால் நீண்டகால மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஆபத்து உண்டு.
4. அறுவை சிகிச்சைக்கு உட்படுபவர்கள் அல்லது சிகிச்சைக்கு முன்பாக உள்ளவர்கள் மாதுளம் பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
மாதுளம் பழம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருவதோடு, சில நோயாளிகளுக்கு ஆபத்தையும் தரும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி மாதுளை பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பான வழி ஆகும்.
இதையும் படிங்க: சியா விதைகளில் கூட சிக்கல் உள்ளது..! இந்த உடல் பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட வேண்டாம்...!