என்னை யாரும் எதுவும் சொல்லாதீங்க. நான் போயிடுறேன்..! என்னை கழுவி ஊத்துனது போதும்.! வைரல் மீம்ஸ்.!
புதுவருடம் பிறக்கவிருக்கும் நிலையில் பலரும் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.
இந்த தலைமுறையினர் மிகவும் கஷ்ட பட்ட வருடம் என்றால், 2020 என்றே கூறலாம். அதற்க்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸானது நாடு முழுவதும் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படாமல் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது.
அதிலும், இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட சிரமப்பட்டு வந்தனர். பலரும் வேலை இழந்து, பிழைக்கவந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்குச்சென்றனர். தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூட தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் சூழ்நிலை உருவானது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362