×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!

Advertisement

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி  
தக்காளி - 1 
முருங்கைக்கீரை - கால் கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவைக்கேற்ப 
கருவேப்பிலை - 1 தேக்கரண்டி 
தனியா - 1 தேக்கரண்டி 
பூண்டு - 2 பல் 
பச்சை மிளகாய் - 1 
வெந்தயம் - அரை தேக்கரண்டி 
சீரகம் - அரை கரண்டி 
கடுகு - 1 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
காய்ந்த மிளகாய் - 1 
கட்டி பெருங்காயம் - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

★பின் கீரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்க வேண்டும். 

★அடுத்து பூண்டு, கருவேப்பிலை, தனியா, பச்சை மிளகாய் மற்றும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கட்டி பெருங்காயம்  சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுது மற்றும் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். 

★தக்காளி வதங்கிய பின் முருங்கை கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக இறக்கும்போது எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் முருங்கைக்கீரை ரசம் தயாராகிவிடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lifestyle #Health #Healthtips #murungai #rasam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story