மஹா சிவராத்திரி இரவு அன்று சிவனை வணங்கினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Maha sivarathiri benefits

மஹா சிவராத்திரி மார்ச் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. பல கல்பகோடி இரவுகள் ஒன்றாக சேர்ந்து உருவாவதுதான் மகா சிவராத்திரி. பல இரவுகள் விழித்திருந்து சிவனை வழிபடுவதை விட, சிவராத்திரி இரவு அன்று கண் விழித்து சிவனை வணங்கினால் அணைத்து பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 12 சிவராத்திரி இரவுகளில் ஒரு வருடம் கூட தவறாமல் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி நம்மை விட்டு காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
அதேபோல சிவராத்திரி இரவு தூங்காமல் கனவிழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கி அடுத்த சில வருடங்களில் அணைத்து செல்வங்களும் நம்மை வந்து சேறுமாம்.