இப்படி பண்ணுங்க..அரிசி, பருப்பு, கோதுமைகளில் இனி பூச்சிகள் வரவே வராது! சூப்பர் டிப்ஸ் இதோ...
அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானியங்களில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க சில டிப்ஸ் இதோ...

அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானியங்களில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் ஏற்படும் பிரச்சனை, குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இது உணவுப் பொருட்களை கெடுத்து, நம்மை மன வேதனையிலும் பொருளிழப்பிலும் ஆழ்த்தலாம். இந்த பிரச்சனையை தவிர்க்க, வீட்டிலேயே இயற்கையான மற்றும் எளிய முறைகளை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: ஓடாத சிலிங் ஃபேனில் சிலுசிலு காற்று வர செலவில்லாத சில டிப்ஸ்! பார்த்து பயன்பெறுங்கள்....
இங்கே சில பயனுள்ள குறிப்புகள்:
1. வெயிலில் வைக்கவும்
அரிசியில் ஏற்கனவே வண்டுகள் இருந்தால், அரிசியை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து 1-2 மணி நேரம் வெயிலில் பரப்பி வைக்கவும். வெயிலின் வெப்பம் பூச்சிகளை அகற்றும்.
2. கிராம்பு
அரிசிப் பாத்திரத்தில் சில கிராம்புகளை போட்டு வையுங்கள். கிராம்பின் வாசனை மற்றும் அதன் இயற்கை எண்ணெய்கள் பூச்சிகளை விரட்டும்.
3. வேப்ப இலை
உலர்ந்த வேப்ப இலைகள் அல்லது கிளைகளை ஒரு துணியில் கட்டி அரிசி பாத்திரத்தில் வையுங்கள். வேப்ப இலைவாசனை பூச்சிகளைத் தடுக்க உதவும். மேலும், வேப்ப இலைகளை அரைத்து உருண்டையாக உருட்டி வைக்கலாம்.
4. பூண்டு
பூண்டு பற்களை உரிக்காமல் அரிசியில் போட்டு வைக்கவும். பூண்டின் மணம் பூச்சிகளை ஓட்டிவிடும். ஈரப்பதம் தவிர்க்க, அவற்றை அப்படியே வைக்க வேண்டும்.
5. போரிக் அமிலம்
போரிக் அமிலப் பொடியை ஒரு துணியில் போட்டு, மூட்டையாக உருவாக்கி அரிசிப் பாத்திரத்தில் வைக்கவும். இது வண்டுகள் மற்றும் பூச்சிகளைத் தடுக்க உதவும். ஆனால் அரிசியை சமைக்கும் முன் நன்கு கழுவ வேண்டியது அவசியம்.
6. மஞ்சள் கட்டிகள்
மஞ்சள் கட்டிகளை அரிசி மற்றும் பருப்பு போன்ற தானியங்களில் போடுவதால் வண்டுகள் அதனைத் தாக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் 4-5 கட்டிகள் போதுமானது.
7. சிவப்பு மிளகாய்
சில உலர்ந்த சிவப்பு மிளகாய்கள் அரிசியில் சேர்த்தால், அவற்றின் மணம் மற்றும் சுவை காரணமாக பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதுவும் ஒரு சிறந்த தீர்வாக செயல்படும்.
இதையும் படிங்க: மிஸ் பண்ணிட்டாதீங்க... நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைகள்தான்!