×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஆயுர்வேத முறையில் உடற்கழிவுகளை உடனடியாக வெளியேற்றுவது எப்படி.?

உடல் எடைக் குறைப்பு என்பது இன்று பலருக்கும் ஒரு குறிக்கோளாகவே மாறிவிட்டது. நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றம் கொண்டுவராமல், ஆரோக்கியமான உடல் எடைக்குறைப்பு சாத்தியமே இல்லை. பப்பாளி மூலம் எளிதான முறையில் உடல் எடையை குறைக்கும் வழியை நாம் இங்கு

Advertisement

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். நமக்கு நன்கு அறிமுகமான ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்டு நம் உடற்கழிவுகளை வெளியேற்ற முடியும்.

நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஆயுர்வேதப் பொருட்களை பற்றி நாம் இங்கு பார்ப்போம். 'திரிபலா சூரணம்' உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவை கலந்துள்ளன.

மேலும் திப்பிலியை வறுத்துப் பொடியாக செய்து, தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தமடையும். முருங்கைக்கீரைப் பவுடரை சூப் செய்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினமும் சமையலில் மஞ்சளை உணவில் சேர்த்தால் கல்லீரல் சுத்தமடையும்.

மேலும் ஆயுர்வேதப் பொருளான அஸ்வகந்தா, நம் உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் சுத்தமாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health #Tips #medicine #latest #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story