×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமைக்கும் உணவின் சுவையைக் கூட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்.!

சமைக்கும் உணவின் சுவையைக் கூட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்.!

Advertisement

சமையல் செய்வதில் ஒவ்வொருவருக்கென்று ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எனினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kitchen Hacks #cooking tips #tasty food #Life style #Healthy life
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story