பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Cat crossing road is bad reason in tamil
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் ஜாதகம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என இன்றளவும் நாம் பின்பற்றித்தான் வருகின்றோம். குறிப்பாக, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது யார் முகத்தில் விழிக்கிறோம், யார் நமது எதிரில் வருகிறார்கள் என பார்ப்பது வழக்கமான ஓன்று.
நாம் பின்பற்றும் இந்த நடைமுறையில் முக்கியமான ஓன்று வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் கெட்டது நடக்கும் என்றும், அது தப்பான சகுனம் என்றும் கூறுவது வழக்கம். வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் சற்று நேரம் அமர்ந்திருந்து தண்ணீர் அருந்திவிட்டு செல்லுமாறு கூறுவார்கள்.
பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? அதாவது பூனை எதிரில் வந்தால், அதிலிருந்து வெளியாகும் சிறு ரோமத்தால் சில தோல் சார்ந்த பிரச்சனை வரும் என்பதற்காக, பூனை சென்ற உடன் சற்று நேரம் கழித்து புறப்பட சொல்கிறார்கள்.