தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோடை வெப்பத்தை தாங்க முடியலையா.?! உடனே இதை பன்னுங்க.!

கோடை வெப்பத்தை தாங்க முடியலையா.?! உடனே இதை பன்னுங்க.!

butter-milk-drink-for-heat-body-on-summer-season Advertisement

அடிக்கிற வெயிலுக்கு மோர் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும். தயிருடன் தண்ணீர் சேர்த்து கடைந்தால் மோர் தயார். நம் முன்னோர்கள் இதையே அதிகம் உணவில் எடுத்துக் கொண்டார்களாம். தயிரை விட மோர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வேகமாக உடல் சூட்டைத் தனிக்கும். இருப்பினும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பத்திற்க்கு மோரில் சில பொருட்கள் கலந்து குடித்தால் அதிக பயன்தரும். அது என்ன பொருள் என்று கீழே பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நாக்கு வறட்சி, தொண்டை வறட்சி, உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்பொழுது ஒரு கோப்பை மோர் குடிப்பது மிகவும் அவசியம். மோரில் சிறிதளவு உப்பு, புதினா,சர்க்கரை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் மோர் குடித்து வந்தால் விரைவில் குணமாகும். 

உடல் உஷ்ணத்தின் விளைவாக சில நேரங்களில் கண்களில் எரிச்சல் எற்படும். அப்போது மோரில் தேவையான அளவு உப்பு,புதினா சேர்த்து குடித்தால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி அளித்து கண்களும் குளுமை பெறும். சிலருக்கு முகம் எரிச்சல், சரும எரிச்சல் ஏற்படும். அந்த சமயத்தில் மோரை முகம் மற்றும் சருமத்தில் தடவினால் உடனடியாகத் தீர்வு கிடைக்கும்.heat

மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்தால் அமிலத்தன்மை குறையும். மோரில் எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். தினமும் காலையில் ஒரு கோப்பை மோர் குடித்தால் நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உணவில் இருக்கும் சத்துக்களை மட்டும் உடலுக்குள் அனுப்பும் வேலையை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும். 

கோடைக்காலத்தில் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை எற்படும். அப்போது மோர் குடித்தால் மோரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி சரிசெய்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் வயிற்று வலி, அதிக இரத்தப்போக்கு பிரச்சனைகளுக்கு மோர் ஒரு சிறந்த பானமாக விளங்குகிறது. மோரில் இஞ்சி சேர்த்து குடித்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா இருப்பதால் உடலில் உள்ள சோடியம் அளவை மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது. எனவே வெய்யில் காலத்தில் மோர் ஒரு அற்புதமான பானமாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#heat #Summer Season #Tips #Health drink #Butter milk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story