×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பாப்ரி பியோல் சர்பத்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பாப்ரி பியோல் சர்பத்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!

Advertisement

உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பாப்ரி பியோல் வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்தது தான் இந்த செய்திக்குறிப்பு.

ஜம்மு-காஷ்மீரில் அனைவராலும் கோடை நாட்களில் விரும்பி குடிக்கக் கூடிய ஒன்றுதான் பாப்ரி பியோல். இது வட்டார மொழியில் "கான் சர்பத்" என்றும் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப
நறுக்கிய பாதாம், பிஸ்தா - 25 கிராம்
துளசி அல்லது சப்ஜா விதை - 25 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 சிட்டிகை
காய்ச்சிய பால் - 50 மி.லிசெய்முறை :

★முதலில் சப்ஜா அல்லது துளசி விதைகளை ஒரு கப் தண்ணீரில் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★பின் ஒரு கிண்ணத்தில் பாலை கொதிக்க வைத்து, அதனுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, ஆறியதும் ஊறவைத்த விதைகளை சேர்க்க வேண்டும்.

★அடுத்து சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

★பின் துருவிய தேங்காய், பாதாம், பிஸ்தா, மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிட்டால் வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#babri beol #Recipe #fresh #tastytips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story