×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி தொடர்ந்து 10 நாட்களாக இளம்பெண் பலாத்காரம்; வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

25 year young girl forced for prostitution in orisha

Advertisement

ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 25 வயது இளம்பெண் தொடர்ந்து 10 நாட்களாக ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரைப்போல் மேலும் பலர் அந்த கும்பலால் பாதிப்படைந்துள்ளனர் என அந்தப் பெண் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த 25 வயது இளம்பெண்ணை காஜல் என்ற மற்றொரு பெண் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஓரிஷாவிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின் காஜலுடன் சேர்ந்த மற்றொரு நபர் அந்த இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தி உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக அந்த பெண்ணை பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்துவைத்து பலர் அந்த பெண்ணுடன் பலாத்காரமாக உறவு கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அறையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று குரல் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பூரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்தப் பெண்ணைப் போன்ற பல பெண்களும் இந்த நபர்களால் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்த ஒரிசா காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#25 year young girl forced for prostitution in oris #gangrape in orisha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story