×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டதில்.... குண்டு பாய்ந்து உயிரிழந்த வாலிபர்...!

நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டதில்.... குண்டு பாய்ந்து உயிரிழந்த வாலிபர்...!

Advertisement

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில்  துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில் இளைஞர் மீது குண்டு பாய்ந்து பலியானார். 

வட இந்தியாவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். 

நேற்று, உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஷால் என்பவர் அவர் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது தவறுதலாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சரத் (24) மற்றும் ராஜ்குமார் என்ற இருவர் மீது குண்டு பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த இருவரும் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜ்குமார் என்பவருக்கு தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்காக, துப்பாக்கியால் சுட்டு  இளைஞர் உயிரிழக்க காரணமான விஷாலை கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #engagement celebration #Youth shot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story