×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமியாரை முடியை பிடித்து சாலையில் இழுத்து சரமாரியாக தாக்கிய மருமகள்! வைரலான வீடியோ! இதுதான் காரணமா?

இளம் பெண் ஒருவர் தனது மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து, சாலையில் அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இளம் பெண் ஒருவர் தனது மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து, சாலையில் அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மாமியார் மருமகள் சண்டை:

ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி என்னும் பகுதியில் வசித்துவருபவர் தனிஷிகா சுல்தானா. இவரது மருமகள் உஜ்மா. சம்பவத்தன்று உஜ்மா தனது தாயாருடன் சேர்ந்து அவரது மாமியாரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். மேலும், மாமியாரின் தலைமுடியை பிடித்து அவரை சாலையில் இழுத்துக்கொண்டு வரும் காட்சிகளும் பார்ப்போரை பதறவைத்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார்:

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாமியார் மருமகள் இருவரும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உஜ்மாவின் கணவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவருவதாகவும், உஜ்மாவின் மாமியார் உஜ்மாவை அவரது கணவருடன் தோலை பேசியில் பேச விடாமல் தடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

முட்டுக்கட்டை போட்ட மாமியார்:

அதுமட்டும் இல்லாமல், மாமியார் மேல் தளத்திலும், மருமகள் கீழ் தளத்திலும் குடியிருக்கும் நிலையில், மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு தண்ணீர் அனுப்பாமல் மாமியார் தடுத்து, தம்மை கொடுமை செய்வதாகவும், அதனால்தான் தான் அவரை தாக்கியதாக மருமகள் உஜ்மா கூறியுள்ளார்.

இருவரையும் விசாரித்த காவல் துறையினர் பின்னர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Viral News #Latest news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story