×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடூரம்.!! பாலியல் பலாத்காரம் செய்து, ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்.!! காதலன் வெறி செயல்.!!

கொடூரம்.!! பாலியல் பலாத்காரம் செய்து, ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்.!! காதலன் வெறி செயல்.!!

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்  பகுதியைச் சேர்ந்தவர் அர்மான். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால் அர்மானின் காதலி கர்ப்பமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு கருவை கலைக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார் அர்மான் .

இதற்கு அவரது காதலி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த  அர்மான் கர்ப்பிணி என்றும் பாராமல் தனது காதலியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்திருக்கிறார். இதனால் கர்ப்பிணி பெண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  அர்மானை கைது செய்து காவல் துறையை விசாரித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Crime #up #pregnant woman #Brutal Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story