×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடி போதையில் வாலிபர் செய்த காரியம்: ஊழியர் குடியிருப்பில் பதற்றம்..!

குடி போதையில் வாலிபர் செய்த காரியம்: ஊழியர் குடியிருப்பில் பதற்றம்..!

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டம் உள்ள ஆதர்ஷ் நகர் காலனியில் சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசிக்கும் இளைஞன் வசிக்கும் அமன் தாஸ் (19). இவரது தாய் லக்ஷ்மி (44). இவரது சகோதரி ஏஞ்சல் (21). தந்தை முன்னதாகவே இறந்துவிட்டதால் இவர்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அமன் தாஸ் குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயும், சகோதரியும் இதனை கண்டித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமன் தாஸ் காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு தாயையும், சகோதரியையும் குத்தி கொலை செய்துள்ளார்.

மறுநாள் காலை வீடு திறந்து கிடந்த நிலையில், லக்ஷ்மி மற்றும் ஏஞ்சல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து குஸ்முண்டா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் தடயவியல் குழு மற்றும் நாய் படை வரவழைக்கப்பட்டு அந்த வீட்டை ஆராய்ந்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், ​​அமன் தாஸின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்தனர். பின்னர் அவரை தனியே விசாரணை செய்ததில், அமன் தாஸ் தனது தாய் மற்றும் சகோதரியை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.

இதனை யடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து கத்தி ஒன்றை கைப்பற்றியதுடன், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chhattisgarh #Murder #police investigation #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story