ரொம்ப கஷ்டபடுறோம்.! கிங்ஃபிஷர் பீர்க்காக ஆதங்கத்தில் இளைஞர் செய்த காரியம்.! ஷாக்கான மாவட்ட கலெக்டர்!!
என்ன கொடுமை சார் இது.! கிங்ஃபிஷர் பீர்க்காக ஆதங்கத்தில் இளைஞர் செய்த காரியம்.! ஷாக்கான மாவட்ட கலெக்டர்!!
தெலுங்கானாவில் உள்ள மதுபான கடைகளில் கிங்பிஷர் பீர் விற்கப்படுவதில்லை. அதனால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக மதுபிரியர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா ஜக்தியல் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தெலுங்கானாவில் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கிங்பிஷர் பீர் விற்கப்படுகிறது.
ஆனால் மாவட்ட தலைநகரங்களில், தனது ஊரில் உள்ள மதுபான கடைகளில் கிங்ஃபிஷர் பிராண்ட் பீர் விற்கப்படவில்லை. இதனால் அந்த பீரை விரும்பி குடிப்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.
மேலும் அதை வாங்குவதற்கு தொலைதூரம் செல்ல வேண்டி இருப்பதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நகர்புறங்களில் உள்ள மதுபான கடைகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை கண்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த இளைஞரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362