×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

60 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம்!. இறுதியாக அவரிடம் சிக்கிய மும்தாஜ்!.

60 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம்!. இறுதியாக அவரிடம் சிக்கிய மும்தாஜ்!.

Advertisement


கேரள மாநிலத்தை சேர்ந்த பிஜு என்பவர் பெண்களை திருமணம் செய்வதையே தொழிலாக வைத்துவந்துள்ளார். இவர், இரண்டாவது திருமணத்திற்கு மணப்பெண் தேவை, என்று விளம்பரம் செய்து, அதில், அவருடைய மொபைல் நம்பரைக் குறிப்பிடுவார். 

விளம்பரத்தை பார்த்து பல பெண்கள் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அதில் வசதியான பெண்களை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்வார்.

திருமணமான அந்த பெண்ணுடன் ஒரு வாரம் தங்கி இருப்பார். பின்னர் அந்தப் பெண்ணின் பெயரிலே சிம் கார்டு வாங்கி அந்த எண்ணின் மூலமாக, மறுபடியும் விளம்பரம் செய்து மற்றொரு பெண்ணை மனப்பார்.

இதே போல இவர், 60 இளம் பெண்களை தொடர்ந்து மணந்து, அவர்களிடம் உள்ள பணம் நகைகளைப் பறித்துக் கொண்டு, உல்லாசமாக வளம் வந்துள்ளார்.

இவர் இறுதியாக மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகத் வழக்கம்போல திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆகி ௫ நாட்களில் அவரிடமிருந்த 15 பவுன் நகை மற்றும் பணத்துடன் வழக்கம்போல மாயமானார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மும்தாஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிஜுவை  தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் போலீசாரிடம் பிடிபட்டார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cheating #young man #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story