ப்ளீஸ்... என்னைய உயிரோட விட்டுங்க... கத்தி கதறிய இளம்பெண்!! இரக்கமின்றி இளைஞர் செய்த கொடூரம்.!
ப்ளீஸ்... என்னைய உயிரோட விட்டுங்க... கத்தி கதறிய இளம்பெண்!! இரக்கமின்றி இளைஞர் செய்த கொடூரம்.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூரின் ஜர்ஹி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் வீட்டருகில் பாபா கான் என்ற நபரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் தந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரன் இருவரும் மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் தனிமையில் இளம்பெண் இருப்பதை அறிந்த பாபா கான் இரவில் யாருக்கும் தெரியாமல் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். பிறகு எங்கு அந்த பெண்ணை உயிரோடு விட்டால் தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண் தானாக தற்கொலை செய்து கொண்டது போல அங்கிருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்க விட்டார் .மேலும் அப்பெண் எழுதியது போல ஒரு தற்கொலை குறிப்பையும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் . இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் வெளியானதை அடுத்து பாபா கானை கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.