×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டின் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த கொடூரம்!

young girl murdered in upstairs

Advertisement


உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் நிஷா என்ற இளம்பெண் சுனில் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனக்கு திருமணமான விஷயத்தை சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தாரிடம் நிஷா கூறியுள்ளார்.

ஆனால் நிஷா குடும்பத்தார் இந்த திருமணத்தை ஏற்க முடியாது என கூறிவிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு நிஷா தனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்று தனியாக படுத்துள்ளார்.

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த நிஷாவின் குடும்பத்தாருக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் திடீரென நிஷாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சுனில் போலீசாரிடம் கூறுகையில், நிஷாவின் பெற்றோர், சகோதரர்கள் தான் அவளை கொன்றுவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Gun shot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story