×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்! அடுத்து நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்.!

திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்! அடுத்து நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்.!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சித்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் சித்ரா மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. மகள் இறந்த செய்தியை கேட்டு பெற்றோர் அதிர்ச்த்தியடைந்தனர். 

இந்நிலையில், தனது மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.  கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சித்ராவின் பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wedding #reception
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story