17 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த மூன்று கயவர்கள்.! விசாரணையில் போலீஸ் ஏட்டும் சிக்கினார்.!
17 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த மூன்று கயவர்கள்.! விசாரணையில் போலீஸ் ஏட்டும் சிக்கினார்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது.
இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் 17 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த 3 கயவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரு புறநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து 3 பேர் மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பெரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த சிறுமிக்கு போலீஸ் ஏட்டு ஒருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.இதனையடுத்து அந்த போலீஸ் ஏட்டு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362