ஆண் நண்பரை அடித்துவிட்டு 16 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு..! குற்றாவளிகளின் வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை.!
ஆண் நண்பரை அடித்துவிட்டு 16 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு..! குற்றாவளிகளின் வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை.!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள நைகாரி என்ற பகுதியில் வசிக்கும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை அவரது நண்பருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு அருகே உள்ள இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு மர்ம நபர்கள் ஆறு பேர் வந்துள்ளனர். அதில் இரண்டு சிறார்களும் இருந்துள்ளனர். அந்த ஆறு பெரும் 16 வயது இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிவிட்டு அப்பெண்ணை கடத்தி சென்று அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
மேலும், அப்பெண்ணை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறித்து, இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் உடல்நிலை மோசமானதால் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், கைதான மூன்று நபர்களின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை புல்டோசர் வைத்து இடித்துள்ளது. மீதமுள்ள மூன்று பேரை கைது செய்தவுடன் அவர்கள் உடமைகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362