முதலிரவை கொண்டாடச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவு.! காவல்துறையின் விசாரணையில் வெளிவந்த உண்மை !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலிரவை கொண்டாடச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவு .... காவல்துறையின் விசாரணையில் வெளிவந்த உண்மை !
உத்திர பிரதேச மாநிலத்தில் முதலிரவை கொண்டாடச் சென்ற தம்பதியினர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோதியா கிராமத்தைச் சார்ந்த பிரதாப் யாதவ் என்ற 22 வயது இளைஞர்கள் புஷ்பா யாதவ் என்ற 20 வயதிலும் பெண்ணிற்கும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தனர் . இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதியினர் தங்கள் வாழ்வை இனிமையாக துவக்குவதற்காக முதலிரவு அறைக்கு சென்றனர். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களது அரை கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு வந்து இருபது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . முதலில் சந்தேகம் மரணமாக கருதி விசாரணையை தொடங்கினாலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக அறிக்கை வந்ததால் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.