இந்த வலி எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது!! கல்யாணத்துக்கு போட்ட பந்தத்தில் மணமகளின் இறுதி சடங்கு!!
திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமண பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்
திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமண பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற இளம் பெண்ணிற்கும் தண்டூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த மே 14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்திலும் திருமணத்தில் அதிகமான உறவினர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமண தம்பதியினர் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்காகச் சென்று விட்டு, அங்கிருந்த கோவில் ஒன்றுக்கும் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிலமணி நேரங்களில் புதுப்பெண் ஸ்ரீவானி வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஸ்ரீவானியை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு உறவினர்கள் பதறியுள்ளனர். சிறிது நேரத்தில் ஸ்ரீவானி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் அங்கிருந்த அனைவரும் கதறி துடித்தனர்.
ஸ்ரீவானி இறப்பிற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என சிலர் கூறியநிலையில், திருமணத்திற்கு முன்பே ஸ்ரீவானிக்கு கொரோனா பரிசோதனை சியப்பட்டதாகவும், அதில் நெகட்டிவ் என வந்ததாகவும் ஸ்ரீவானியின் உறவினர்கள் விளக்கமளித்தனர்.
ஸ்ரீவானி தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உயிரிழந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதில் மேலும் கொடுமை என்னவென்றால், ஸ்ரீவானியின் திருமணத்திற்காக போடப்பட்ட பந்தலிழையே அவரது இறுதி சடங்கும் நடத்தும் நிலை வந்துவிட்டதாக கூறி அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362