ஒரு கோடி ரூபாய் பணத்துடன் பூங்காவில் சாதாரணமாக சுற்றித்திரிந்த இளைஞன்.! திகைத்துப்போன போலீசார்.!
ஒரு கோடி ரூபாய் பணத்துடன் பூங்காவில் சாதாரணமாக சுற்றித்திரிந்த இளைஞன்.! திகைத்துப்போன போலீசார்.!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருக்கும் பூங்காவில் சந்தேகத்திற்கிடமான நபர் நிறைய பணத்துடன் சுற்றி திரிவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அந்த நபர் கொல்கத்தாவில் உள்ள பேங்க்சல் பகுதியை சேர்ந்த மஹேஷ்ட்டல என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அவர் வைத்திருந்த பை முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவரிடம் இந்த பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து கேட்ட போது, அவர் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362