×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுவனை காருக்குள் வைத்து வன்கொடுமை செய்த நபர்கள்! அதிர்ச்சி சம்பவம்!

young boy abused in car

Advertisement


மேற்கு வங்க மாநிலம், கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வேலைக்கு சென்று பணியை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த இளைஞன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, சிறுவன் அருகே கார் ஒன்று நின்றுள்ளது. 

அந்த காரில் சிறுவனுக்கு ஏற்கனவே அறிமுகமான 6 பேர் பேச்சுக்கொடுத்துக்கொண்டே காரில் வற்புறுத்தி ஏற்றியுள்ளனர். பின்னர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த மர்மநபர்கள் சிறுவனை தாக்கிவிட்டு சிறுவனிடம் இருந்து ரூ.17 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த மர்மநபர் 6 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு மணிநேரம் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது தெரிய வந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young boy #abused
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story