×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலை கேட்ட இளம்பெண் 6 பேர் கும்பலால் கற்பழிப்பு.. வேடிக்கை பார்த்த ராட்சசி.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!

வேலை கேட்ட இளம்பெண் 6 பேர் கும்பலால் கற்பழிப்பு.. வேடிக்கை பார்த்த ராட்சசி.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!

Advertisement

வேலை கேட்ட தோழியை, காமுகன்களுக்கு விருந்தாக்கிய பெண் மற்றும் பலாத்காரம் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபா பகுதியில் ஒரு பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தன்னுடைய தோழியிடம் ஒரு பெண் வேலை கேட்டுள்ளார். அதற்கு தோழி வேலைக்கேட்ட பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த நிலையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

உண்மை என்னவென்று தெரியாத அந்த பெண்ணும், அதனை வாங்கிக் குடிக்க, சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது மயங்கிய பெண்ணை ஹரிசிங், வீரேந்திர தஹியா, ஜெய் பிரகாஷ், சுக்பீர் மற்றும் தேவிராம்  உள்ளிட்டோர் பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து, வீடியோவை எடுத்து வைத்து மயக்கம் தெளிந்த பின், பெண்ணின் தோழியும், காமுகன்களும் சேர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நீ வெளியே கூறினால் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டு விடுவோம் என்று துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் காவல்துறையினரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் தோழி மற்றும் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haryana #boys #Rape #Gang #patithaba
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story