வசதிபடைத்த ஆண்களை மயக்கி திருமணம் செய்த பெண் போலீஸ்.! மொத்தம் எத்தனை பேர்.? அதிர்ச்சி பின்னணி.!
வசதிபடைத்த வாலிபர்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் பறித்து வந்த பெண் காவலர் ஒருவர் சிக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆயுதப்படை காவல்துறை பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் சந்தியா ராணி எனபவருக்கு ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதன் மூலமாக ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் இரண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, மூன்றாவது கணவருடன் வசித்து வந்த நிலையில், மூன்றாவது கணவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 திருமணங்களை மறைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சந்தியா ராணியின் காதல் லீலைகள் குறித்து அறிந்தது அதிர்ச்சியடைந்த சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில், என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று சந்தியா ராணி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சரண் தேஜ் சந்தியா ராணியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனை ஏற்க மறுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூட்டி வைத்து அடித்துள்ளார் சந்தியாராணி. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சரண் தேஜ் இது குறித்து காவல் ஆணையருக்கு வாட்ஸ் அப்பில் புகார் கொடுத்து தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் கூறி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362