மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் தாய் கர்ப்பம்! 40 வயதில் நான்கு குழந்தைகள் பிறந்தது.
Women gave birth to 4 kids at age of 40
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள் சகன்லால் - தாலிபாய்(40) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் முதல் மகளுக்கு திருமணம் முதிர்ந்த்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரண்டாவது மக்கள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் இவர்களின் மகன் இறந்துவிட்டார். மகன் இறந்துவிட்டதால் கடைசி காலத்தில் தங்களை யார் பார்த்துக்கொள்வார் என நினைத்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து மருத்துவர்களை அணுகியுள்ளனர்.
தாலிபாய்க்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுவிட்டதால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து தம்பதியினர் அதற்கு சம்மதித்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமான தாலிபாய் தனது 40 வது வயதில் நான்கு குழந்தைகளை பெற்றுடுத்துள்ளார். அதில் இரண்டு பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்.
மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் 40 வயதில் தாய் மீண்டும் கர்ப்பம் அடைந்து 4 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362