×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டிய கணவன் சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. ஆடிப்போன மனைவி... பரபரப்பு சம்பவம்.

மனைவி மாற்று முறையில் ஈடுபடும்படி மனைவியிடம் கணவன் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மனைவி மாற்று முறையில் ஈடுபடும்படி மனைவியிடம் கணவன் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எஸ்.ஜி சாலை பகுதியில் வசித்து வருபவர் ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது 40 வயதாகும் ஹேமாவிற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் முடிந்தநிலையில் தற்போது 11 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் ஹேமாவின் கணவருக்கும் வேறொரு பெண்ணிற்கும் உறவு இருப்பது சமீபத்தில் ஹேமாவிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கேட்டபோது, அவர் தனது மனைவியை தனது நண்பருடன் உறவில் இருக்கும்படியும், நண்பனின் மனைவியுடன் தான் உறவில் இருக்கவேண்டும் எனவும் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, அன்றில் இருந்து தனது மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார் கணவர். மேலும் 11 வயது மகனை மனைவிக்கு தெரியாமல் கூட்டிச்சென்று உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்துவைத்துள்ளார். மகனை பார்ப்பதற்காக அந்த பெண் அங்கு சென்றபோது அவரது உறவினர்கள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண், தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Abuse
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story