×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹரியானாவில் பயங்கரம்.!! முட்டை குழம்பிற்காக கொலை செய்யப்பட்ட காதலி..!! போதை காதலனின் கொடூர செயல்.!!

ஹரியானாவில் பயங்கரம்.!! முட்டை குழம்பிற்காக கொலை செய்யப்பட்ட காதலி..!! போதை காதலனின் கொடூர செயல்.!!

Advertisement

ஹரியானாவில் முட்டை குழம்பு கேட்டு சமைத்து தர மறுத்த காதலியை கொடூரமாக கொலை செய்த காதலனின் வெறிச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் லாலன் யாதவ் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 35 வயதாகும் லாலன் யாதவ் ஏற்கனவே திருமணமானவர் இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் அஞ்சலி என்ற பெண்ணுடன் குருகிராம் பகுதியில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

மது போதைக்கு அடிமையான இவர் தினமும் வெறித்தனமாக குடிப்பவர் என்று கூறப்படுகிறித்து . இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் லாலன் யாதவ் செம போதையில் தனது காதலி அஞ்சலியிடம் முட்டை குழம்பு சமைத்துக் கொடுக்குமாறு ஆசையாக கேட்டுள்ளார்.

ஆனால் அஞ்சலி முட்டை குழப்பு செய்து தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த  காதலன் லாலன் யாதவ் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் ஆசை காதலி அஞ்சலியை கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அஞ்சலி அங்கேயே இறந்துள்ளார்.இந்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் போதையில் கிடந்த லாலன் யாதவ்யை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Inmdia #haryana #Egg Gravy #Lover Murdered #Man arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story