பெண் பயணியிடம் டிக்கெட் கேட்ட TTE....! அடுத்த நொடி ஆடையைக் கிழித்துக் கொண்டு பெண் செய்த அதிர்ச்சி காரியம்.... வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை..!!!
ரயிலில் டிக்கெட் பரிசோதனையின்போது பெண் பயணி ஆடைகளைத் தானே கிழித்ததாக வெளியாகிய வீடியோ வைரலான நிலையில், ரயில்வே சேவா விளக்கம் கேட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதனையின்போது பெண் பயணி ஒருவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் தன்னை தவறாகத் தொட்டதாக அந்தப் பெண் குற்றம்சாட்டிய நிலையில், அவர் தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டதாக வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
டிக்கெட் பரிசோதனையில் தொடங்கிய வாக்குவாதம்
ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனை நடைபெற்றபோது, அந்தப் பெண்ணிடம் உரிய டிக்கெட் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தி விவகாரத்தை முடிக்க அவர் முயன்றதாகவும், தனது சகோதரர் ரயில்வே ஊழியர் என்று கூறி டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் மாதம் 6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி! ஆனால் கணவன் போட்ட பலே திட்டம்.... இறுதியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!
வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்தப் பெண் தனது சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டிக்கெட் பரிசோதகர் தனது ஆடைகளை கலைக்க முயற்சிப்பதாக புகார் கூறியதாக தெரிகிறது.
ஆடைகளை கிழித்ததாக வெளியான வீடியோ
தன்னை 'ராதிகா திவாரி' என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், டிக்கெட் பரிசோதகர் தன்னை தவறான நோக்கத்துடன் தொட்டதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சத்தமிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டதாகவும் வீடியோவில் தெரிகிறது.
இதற்கிடையே, தன் மீது பின்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம் என்பதால், டிக்கெட் பரிசோதகர் தொடக்கத்திலிருந்தே நடந்தவற்றை தனது மொபைல் போனில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரயில்வே சேவா கேட்ட முக்கிய விவரங்கள்
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே பயணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு கணக்கான ரயில்வே சேவா இது தொடர்பாக பதிலளித்துள்ளது. சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வசதியாக, சம்பந்தப்பட்ட ரயிலின் PNR எண் மற்றும் தொடர்புடைய மொபைல் எண்களைப் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், சம்பவம் நடந்த ரயில், இடம், சம்பந்தப்பட்ட பெண்ணின் முழு விவரம் உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக உறுதி செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டியுள்ளது.