×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொலை செய்யப்பட்ட 1 வயது பிஞ்சு.! தற்கொலை செய்த தாய்.!! வரதட்சணை கொடுமையால் நேர்ந்த கொடூரம்...

கொலை செய்யப்பட்ட 1 வயது பிஞ்சு.! தற்கொலை செய்த தாய்.!! வரதட்சணை கொடுமையால் நேர்ந்த கொடூரம்...

Advertisement

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர் சாரி இவரது மனைவி காதே ஜெயப்பிரதா. இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீஜாவுக்கு வாரங்கள் பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். நரேஷ் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

நரேஷ் மற்றும் ஸ்ரீஜா தம்பதிக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நரேஷ் ஸ்ரீஜாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. கேட்ட வரதட்சணையை கொடுக்காததால் அவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்த ஸ்ரீஜா அவரது கொடுமை தாங்க முடியாமல் தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கிறார். மகனுக்கு பிறந்தநாள் வருவதை கொண்டாடுவதற்காக வீட்டில் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் நரேஷ்.

இது தொடர்பாக அவர் தனது மனைவி ஸ்ரீஜா உடன் தொலைபேசியில் பேசும்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதமும் சண்டையும் நடந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா தனது மகனை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளும் பேரனும் நீண்ட நேரம் ஆகியும் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீஜாவின் தாய் காதே ஜெயப்பிரதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீஜாவின் தந்தை வெங்கடேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நரேசைக்கு வருமாறு தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #telegana #Hyderabad #Dowry Problem #Woman And Aon Dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story