இனி விமான பயணத்தில் "WiFi" வசதி! மத்திய அரசின் அறிவிப்பால் படுகுஷியில் பொதுமக்கள்!
wifi in flight
இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’ இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’(WiFi) இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வை-பை மூலம் இணைய சேவைகளை வழங்க விமானி அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழையும்போது ‘வை-பை’ வசதியை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு ‘வை-பை’ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்த வசதியை ஃப்ளைட் மோடில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362