செய்றதெல்லாம் செஞ்சுட்டு சாமி முன்னாடி 10 நிமிஷம் மௌன அஞ்சலி.! கணவனின் சடலத்தோடு 8 மணி நேரம்....... இறுதியில் மனைவி செய்த அந்த ஒரு சம்பவம்...!!!
மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூரில் கணவர் குழந்தையை துன்புறுத்தியதாகக் கூறி தடியால் தாக்கிய மனைவி, பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் குடும்ப தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை தடியால் தாக்கி உயிரிழக்கச் செய்ததாக கூறப்படும் மனைவி, பின்னர் காவல் நிலையத்துக்குச் சென்று தானாகவே சரணடைந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி
தகவலின்படி, நீலம் குஷ்வாஹா மற்றும் அவரது கணவர் தீன்தயாள் குஷ்வாஹா ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி போதையில் இருந்த தீன்தயாள் நீலத்தைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், தனது குழந்தையை கணவர் துன்புறுத்தியதாக கூறி ஆத்திரமடைந்த நீலம், அவரை தடியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தீன்தயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீ அதை பண்ணாதே... எனக்கு பிடிக்கல! மனைவியை கொன்று சடலத்துடன் 7 மணி நேரம்.... தம்பிக்கு போன் செய்து கணவர் சொன்ன ஷாக் நியூஷ்!!!
உடலருகே எட்டு மணி நேரம்
கணவர் உயிரிழந்த பிறகு, நீலம் சுமார் எட்டு மணி நேரம் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த கோயில் ஒன்றுக்குச் சென்று சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நேராக காவல் நிலையத்தில் சரணடைப்பு
கோயிலில் இருந்து வெளியேறிய நீலம், நேரடியாக காவல் நிலையம் சென்று நடந்தவற்றை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் குடும்பத் தகராறுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.