×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது கணவனை கொன்றால் ரூ.50,000 பரிசு.. மனைவி அதிரடி அறிவிப்பு!

எனது கணவனை கொன்றால் ரூ.50,000 பரிசு.. மனைவி அதிரடி அறிவிப்பு!

Advertisement

எனது கணவனை கொலை செய்தால் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என திருமணமான பெண் அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது‌.

இதனையடுத்து அந்த பெண் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நிஷாந்த் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல வந்த போது, உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், கொலை செய்து விடுவேன் என அந்த பெண் தனது கணவரை மிரட்டியுள்ளார்.

மேலும், அவர் தனது வாட்ஸ் அப்பில் தனது கணவனை கொலை செய்தால் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நிஷாந்திடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து நிஷாந்த் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் தனது மனைவிக்கு வேறொருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் தன்னை பிரிந்து சென்றதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #Price announce #husband and wife #Crime #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story