×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பக்கா மாஸ்டர் பிளான்.. பாஜக பிரமுகரை தீர்த்து கட்டிய மனைவி.! எல்லாம் அதற்காகதான்.!

பக்கா மாஸ்டர் பிளான்.. பாஜக பிரமுகரை தீர்த்துகட்டிய மனைவி.! எல்லாம் அதற்காகதான்.!

Advertisement

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்கனோடி தாண்டா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 38 வயது நிறைந்த ராஜு நாயக். இவர் பாஜக பிரமுகராம். மேலும் ஊருக்குள் பிரபலமாக இருந்த அவர்,  தாலுகா பஞ்சாயத்து போர்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தாராம்.

இவரது மனைவி சினேகா. 26 வயது நிறைந்தவர். இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. அதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தெரிய வந்தநிலையில் ராஜு மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் கேட்பதாக இல்லை. அதனால் இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் தனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்த அவர் ராஜு நாயக் குடிக்கும் மதுவில் அதிகளவு தூக்க மாத்திரைகளைப் போட்டு கொடுத்துள்ளார். அதைக் குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே சினேகா கணவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணைக்கு பிறகு  சினேகாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Murder #illegal affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story