×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காப்பி தோட்டத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்.. கணவர் பேச்சைமீறிய கள்ளக்காதல் மோகத்தால் விபரீதம்..!!

காப்பி தோட்டத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்.. கணவர் பேச்சைமீறிய கள்ளக்காதல் மோகத்தால் விபரீதம்..!!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் முடிகெரே உக்கேஹள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி நேத்ரா. நேத்ராவுக்கு அதே பகுதியில் வசித்து வந்த தனஜெயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்து, இருவரும் தனிமையில் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் ஜெகதீசுக்கு தெரிய வரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் கள்ளக்காதல் மீது ஆசை கொண்ட நேத்ரா அதனை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் மனமடைந்துபோன ஜெகதீஷ், கடந்த மூன்றாம் தேதி வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

மருமகளின் கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தை அறிந்த ஜெகதீசன் தாயார் யசோதம்மா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரத்ததை தொடர்ந்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நேத்ராவிடம் விசாரணை செய்வதற்காக விரைந்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு பயந்த நேத்ரா தலைமறைவாகவே 3 நாட்களாக அவரை தேடிவந்த நிலையில், அங்குள்ள காபி தோட்டத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், அவர் உண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா?, இல்லை கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karnataka State #india news #illegal affair #கள்ளக்காதல் விவகாரம் #கணவன் மனைவி தற்கொலை #காப்பி தோட்டம் #Crime news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story