×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்ததால் மனைவி தற்கொலை!! நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம்..

மகாராஷ்டிரா மாநிலம் அம்பேகோன் பகுதியைச் சேர்ந்தவர் காஹினிநாத் சரவடேவ். இவரது மனைவி

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் அம்பேகோன் பகுதியைச் சேர்ந்தவர் காஹினிநாத் சரவடேவ். இவரது மனைவி ப்ரதிக்‌ஷா. இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலிருந்தே இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்றும் வழக்கம்போல் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இருந்த காஹினிநாத், மனைவி ப்ரதிக்‌ஷா சமைத்த சாப்பாட்டை சாப்பிட கூடாது என்ற எண்ணத்தில், வீட்டுக்கு வரும்போதே ஹோட்டலிருந்து பானிபூரி வாங்கி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு மேலும் அதிகமாகியுள்ளது. அதை நினைத்து பிரதிக்ஷா பெரும் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை கண்டு பதறிப்போன குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரதிக்‌ஷாவின் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wife #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story