×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவர்களே.. அதை மட்டும் மறந்துராதீங்க.! குடும்பத்துடன் மனைவி தாக்கியதில் கணவன் மருத்துவமனையில் அனுமதி.! என்ன நடந்தது?

கணவன்மார்களே.. அதை மட்டும் மறந்துராதீங்க.! மனைவி தாக்கியதில் கணவன் மருத்துவமனையில் அனுமதி.! என்னதான் நடந்தது?

Advertisement

திருமண நாளை மறந்த தன் கணவரை மனைவி குடும்பத்துடன் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை காட்கோபரில் வசித்து வருபவர் விஷால் நாங்க்ரே. அவரது மனைவி கல்பனா. இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

விஷால் கொரியர் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராகவும், கல்பனா ஹோட்டல் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு 5வது திருமண நாள் வந்துள்ளது. ஆனால் அதனை விஷால் நாங்ரே மறந்துள்ளார். இதனால் அவரது மனைவி கல்பனா அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

விஷால் சமாதானப்படுத்தியும் அவர் கூறுவதை கல்பனா கேட்கவில்லை. மறுநாளும் அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உன்னுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை அவர் தனது குடும்பத்தினரிடம் கொண்டு சென்ற நிலையில் அவர்களது வீட்டிற்கு வந்த கல்பனாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷாலையும், அவரது தாயையும் அடித்து தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த விஷால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wedding day #attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story