×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஒட்டுமொத்த குடும்பத்தினர்! சிக்கிய கடிதத்தால் பெரும் குழப்பத்தில் போலீசார்! தொடரும் மர்மம்!

whole family commits suicide in thirussur

Advertisement

திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் தைப்பரம்பத் வினோத். இவரது மனைவி ரேமா. இவர்களுக்கு நயனா என்ற 17 வயது மகளும், 9 வயதில் நீரஜ்  என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் நால்வரும் இறந்து அழுகிய நிலையில் சடலமாக,  அவர்களது வீட்டிலிருந்து போலீசாரால்  கண்டெடுக்கப்பட்டனர் .

மேலும் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட  நிலையில், அவர்கள்  நால்வரும் சடலங்கள் கைப்பற்றப்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர்களது வீட்டில் ஆய்வு மேற்கொண்டபோது கடிதம் ஒன்று சிக்கியது. இதில் தவறு செய்தவர்கள் தவிர அனைவரையும் மன்னிக்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் போலீசார்கள் அவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என எண்ணிய நிலையில், அவர்களுக்கு எந்தவிதமான பண நெருக்கடியும் இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவர்களது மர்மமரணம் குறித்து போலீசார் பெரும் சந்தேகத்தில் உள்ளனர். மேலும் தீவிரமாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #dead #family
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story