×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன கொடுமை இது...?. கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

என்ன கொடுமை இது...?. கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்தால் கொள்ளிக்கட்டையால் சூடு வைத்துள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள சால்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித் வாலிபர் ஆயுஷ்(22). இவர் கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். ஆயுஷ் கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்த அங்கிருந்த சிலர் ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து, ஒரு தூணில் கட்டிவைத்தனர். 

அதன் பின்னர் கொள்ளிக்கட்டடையால் இரவு முழுவதும் அவர் உடலில் சூடு வைத்துள்ளனர். மறுநாள் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்ற ஆயுஷ், மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயுஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், கிராமத்தில் உள்ள ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு கொள்ளிக்கட்டையால் சூடு வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttarakhand #Dalit Youth #Caste Violence
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story