65 வயது முதியவருடன் 19 வயது இளம்பெண் காதல்; குடும்பத்தினர் எதிர்பால் ஒரே மரத்தில் தூக்கிட்டு விபரீத முடிவு.!
65 வயது முதியவருடன் 19 வயது இளம்பெண் காதல்; குடும்பத்தினர் எதிர்பால் ஒரே மரத்தில் தூக்கிட்டு விபரீத முடிவு.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜலபைக்குரி மாவட்டம், துபுரி கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்மணி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் 65 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார்.
19 வயது இளம்பெண்ணுடன் பழகி அந்த முதியவர், ஒருகட்டத்தில் அவரை காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது. பின் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரியவரவே, இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை கடந்து வித்தியாசம் இருப்பதால், முதியவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், காதல் ஜோடி வயதை கடந்து தங்களின் காதலில் உறுதியாக இருந்துள்ளது.
இந்நிலையில், இருவரும் தங்களின் காதலை உறவினர்கள் பிரித்திடுவார்கள் என்பதை உணர்ந்துகொண்டு, ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.