கங்கை நதியில் கண்ணிமைக்கும் நொடியில் மூழ்கிய பெண்! உயிரை பணையம் வைத்து காப்பாத்திய ரியல் ஹீரோ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
மேற்கு வங்கத்தில் கங்கை நதியில் மூழ்கிய பெண்ணை உயிரைப் பணையம் வைத்து மீட்ட தன்னார்வலர் கோரக்ஷா தீட்சித்தின் வீரச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தன்னார்வலரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பாரக்பூர் படகுத் துறையில் நடந்த சம்பவம்
கடந்த டிசம்பர் 17 அன்று, மேற்கு வங்கத்தின் பாரக்பூர் படகுத் துறையில் படகில் ஏற முயன்ற நடுத்தர வயதுப் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி கங்கை நதியில் விழுந்தார். வேகமான நீரோட்டம் காரணமாக அவர் சுமார் மூன்று அடி ஆழத்திற்கு மூழ்கினார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
துரிதமாக செயல்பட்ட தன்னார்வலர்
அந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்த குடிமைத் தன்னார்வலர் கோரக்ஷா தீட்சித் சிறிதும் தயங்காமல் ஒரு கயிற்றின் உதவியுடன் ஆற்றுக்குள் குதித்தார். கடும் நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல், மூழ்கிய பெண்ணை பிடித்து கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: உயிரை பணையம் வைத்து 20 வயது இளையர் செய்த செயல்! அடுத்து இளைஞருக்கு காத்திருந்த பெரிய சர்ப்ரைஸ்! வைரல் வீடியோ!
காவல்துறை பாராட்டு
இந்த வீரச் செயலை பாராட்டும் வகையில் மேற்கு வங்க காவல்துறை தனது எக்ஸ் (Twitter) தளத்தில் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வைரலான சிசிடிவி காட்சிகள்
மீட்புப் பணியின் சிசிடிவி காட்சிகள் வைரலானதை தொடர்ந்து, உயிர் தப்பிய பெண் தன்னைக் காப்பாற்றிய தன்னார்வலருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். சரியான நேரத்தில் எடுத்த முடிவு தான் தனது உயிரைக் காப்பாற்றியது என்றும் அவர் கூறினார்.
ஆபத்தான சூழ்நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட கோரக்ஷா தீட்சித்தின் துணிச்சலை உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் மனிதநேயத்தின் உண்மையான முகமாக அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.