×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சரக்கு இரயில் யானைகள் மீது மோதி கோர விபத்து: தண்டவாளத்தில் நடந்துசென்ற குட்டி உட்பட 3 யானைகள் பரிதாப பலி.!

சரக்கு இரயில் யானைகள் மீது மோதி கோர விபத்து: தண்டவாளத்தில் நடந்துசென்ற குட்டி உட்பட 3 யானைகள் பரிதாப பலி.!

Advertisement

 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள புக்ஸ்சா புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், 3 யானைகள் மீது சரக்கு இரயில் மோதியதில் பரிதாபமாக பலியாகின. நேற்று காலை 7 மணியளவில், ராஜபாட்காவா - கழ்ச்சினி இரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு இரயில் பயணிக்கும்போது, இத்துயரம் நேர்ந்துள்ளது. 

2 யானைகள், ஒரு குட்டி யானை என 3 யானைகள் தண்டவாளத்தின் நடுவே பயணம் செய்த நிலையில், ஓட்டுநர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. இறுதியில் யானைகள் மீது மோதி இரயில் நின்றுள்ளது.

இந்த விஷயம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானை மீது மோதிய இரயில் வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. புள்ளிவிபரங்களின்படி, 20 யானைகள் ஆண்டுக்கு இரயிலில் மோதி உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#west bengal #India #elephant #Goodes Train
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story