தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலை.. வன்முறையில் 7 பேர் உயிருடன் தீக்கிரையாக்கப்பட்ட பயங்கரம்.!

கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலை.. வன்முறையில் 7 பேர் உயிருடன் தீக்கிரையாக்கப்பட்ட பயங்கரம்.!

West Bengal Birbhum Violence 7 Died Advertisement

மர்ம கும்பலால் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கிராமத்தில் வன்முறை நடந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 7 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பிற்பம் (Birbhum) மாவட்டம், ராம்பூர்ஹாத் - பர்ஷல் கிராம துணைத் தலைவர் பாது ஷெய்க். இவர் நேற்று மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும்போது, அவரை இடைமறித்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த பாதுவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால், விவகாரம் கட்சியினருக்கு தெரியவந்துள்ளது. 

west bengal

பாதுவின் உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊரான போஃடூய் கிராமத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு திடீர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, மர்ம கும்பலொன்று வன்முறையில் ஈடுபட்டு, கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடி தீ வைத்து கொளுத்தியது. 

இந்த சம்பவத்தில் வெவ்வேறு வீடுகளில் இருந்த 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சடலத்தை மீட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#west bengal #India #Birbhum #violence #police #death #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story