×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்... கதறக்கதற நடந்த பயங்கரம்..!

12 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்... 3 பேர் கும்பலால் நடந்த பயங்கரம்..!

Advertisement

3 பேர் கும்பலால் 12 வயதுடைய சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. பசிக்கு உணவு வாங்க சென்ற சிறுமிக்கு நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஷீலாக் இரயில் நிலையம் அருகேயுள்ள நர்கெளடங்கா பகுதியில் 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டருகே ரபியூல் காஜி (வயது 27) என்பவர் வசித்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று 12 வயது சிறுமிக்கு இரவு 11:30 மணியளவில் பசி எடுத்துள்ளது. இதனால் வெளியே சென்று உணவு வாங்கி வர புறப்பட்டுள்ளார். அப்போது, சிறுமியை கவனித்த ரபியூல், விபரங்களை விசாரித்துள்ளார். 

பின்னர், தன்னை நல்லவன் போல காட்டிக்கொண்ட காமுகன், தானும் பாதுகாப்புக்கு உடன் வருவதாக தெரிவித்து இருக்கிறான். சிறுமியும் விபரம் புரியாமல் உடன் செல்ல, ஒதுக்குபுறமான இடத்தில் முன்னதாகவே தயாராக இருந்த நண்பர்களின் வருகைக்காக காத்திருந்துள்ளான். 

அங்கு இரண்டு நண்பர்கள் வந்ததும் மூவராக சேர்ந்து காமுக கூட்டம் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. கயவர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் விவரித்துள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#west bengal #Minor Girl #sexual abuse #gang rape #police #மேற்கு வங்கம் #பாலியல் தொல்லை
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story