×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிந்து வெற்றி பெறுவேன் - வீரப்பன் மகள் சூளுரை!

எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிந்து வெற்றி பெறுவேன் - வீரப்பன் மகள் சூளுரை!

Advertisement

எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிந்து வெற்றி பெறுவேன் என்று வீரப்பன் மகள் வித்யாராணி சூளுரைத்துள்ளார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி விடுகிறது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகன் நித்யா ராணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆகிய எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் எனக்கு தொந்தரமே செய்கின்றனர். வீட்டுமனை பரிசீலனையின் போது, எங்கள் கட்சியினர் மீது காரை ஏற்றுவது போல் சிலர் வந்தனர். 

அதேபோல் நேற்று முன்தினம் எங்கள் கட்சி பொறுப்பாளர்களிடம் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டினார். தேர்தல் அதிகாரிகள் எங்கள் வாகனங்களுக்கு பின்னர் வருவதை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. போலீசார் எங்கள் மீது வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Veerappan daughter #Nithyarani #NTK #seeman #Krishnagiri
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story