தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலில் எருமை.. இப்போ பசு மாடு!! ஒரு வாரத்திலேயே அடுத்தடுத்தாக இரு விபத்துகள்.! சேதமடைந்த வந்தே பாரத் விரைவு ரயில்.!

முதலில் எருமை.. இப்போ பசு மாடு!! ஒரு வாரத்திலேயே அடுத்தடுத்தாக இரு விபத்துகள். சேதமடைந்த வந்தே பாரத் விரைவு ரயில்!!

vanthe-bharath-train-meet-second-accident-TUVT6G Advertisement

இந்தியாவில் ஏற்கனவே இரு வந்தே பாரத் ரயில்கள் இயங்கிவரும் நிலையில் மூன்றாவது அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது 180கீமீ வேகத்தில் செல்லக்கூடியது. மும்பை முதல் குஜராத் காந்திநகர் வரை செல்லும் இந்த ரயில் முதல் நாள் செல்லும்போதே தண்டவாளத்தில் தவறுதலாக வந்த 4 எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரயிலின் என்ஜின் முன்பகுதி பெருமளவில் சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகளும் உயிரிழந்தது. இந்நிலையில் விரைவு ரயில் மீது மோதி சேதம் ஏற்படுத்தியதால் எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயிலின் முன்பகுதி சரி செய்யப்பட்டு மீண்டும் பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று வந்தே பாரத் விரைவு ரயில் குஜராத்தின் கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த போது பசு மாடு மீது மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது.

Vanthe bharath

இந்த விபத்தில் ரயிலின் முன் பகுதியில் லேசாக சேதமடைந்துள்ளதாகவும், அது உடனே சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் இயக்கபட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. இவ்வாறு ரயில் சேவை துவங்கிய ஒரு வாரத்திலேயே வ ந்தே பாரத் விரைவு ரயில் இரு விபத்துக்களை சந்தித்தது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vanthe bharath #train #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story